close
Choose your channels

பெற்றோர் இறந்த துக்கத்திலும் கண்ணீருடன் தேர்வெழுதிய +2 மாணவி

Monday, March 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு மாணவருக்கோ, மாணவிக்கோ +2 தேர்வு என்பது மிக முக்கியமானது. இந்த தேர்வின் முடிவுதான் அவர்களின் எதிர்கால கனவை நனவாக்கும். இதனால் இந்த தேர்வை அனைத்து மாணவ, மாணவர்களும் பொருப்புடன் எழுதி வருகின்றனர்.
இந்த நிலையில் மேட்டூர் அருகே தாய், தந்தை இருவரும் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்த நிலையில், துக்கத்திற்கு இடையேயும் பெற்றோரின் கனவை நிறைவேற்ற +2 தேர்வை மாணவி ஒருவர் இன்று எழுதியுள்ளார்
நேற்று மாலை மேட்டூரை சேர்ந்த மின்வாரிய ஊழியர் முருகேசன் மற்றும் அவரது மனைவி சுமதி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் இருவரும் பலியாகினர்.
பெற்றோர் வீட்டில் பிணமாக இருக்கும் நிலையிலும் அவர்களுடைய மூன்றாவது மகள் அமிர்தவல்லி மிகுந்த துக்கத்திற்கு இடையே, பொறியாளர் ஆகவேண்டும் என்ற தனது பெற்றோரின் கனவை நிறைவேற்ற இன்று கண்ணீருடன் தேர்வை எழுதினார். சக மாணவ, மாணவிகள் அமிர்தவல்லிக்கு ஆறுதல் கூறிய காட்சி கல்நெஞ்சையும் கரைய வைக்கும் அளவுக்கு இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.