close
Choose your channels

சாரண, சாரணியர் இயக்க தேர்தல்: எச்.ராஜா தோல்வி

Saturday, September 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று சென்னை மெரினாவில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும், பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குனர் பி.மணியும் போட்டியிட்டனர்.

இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் எச்.ராஜா ஆதரவாளர்கள் தேர்தல் அதிகாரிகளில் மோதலில் ஈடுபட்டனர். இதனால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டாலும் பின்னர் தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்தது.

இந்த நிலையில் சற்றுமுன்னர் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எச்.ராஜா தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக இந்தத் தேர்தலே செல்லாது என்றும் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற இருந்த தேர்தலை முன்கூட்டியே நடத்திவிட்டதாகவும் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.