close
Choose your channels

சென்னை கல்லூரி மாணவிகள் 105 பேர் திடீரென மருத்துவமனையில் அனுமதி

Monday, July 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்த 105 மாணவிகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள கல்லூரி ஒன்றின் விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு நேற்று இரவு பல்லி விழுந்த உணவு பரிமாறப்பட்டதாக தெரிகிறது. இதனால் உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்ட 105 மாணவிகள் உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பெரும்பாலான மாணவியர்கள் புற நோயாளிகள் பிரிவிலேயே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 17 மாணவியர்களும், ராயப்பேட்டை மருத்துவமனையில் 48 மாணவியர்களும் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கல்லூரியின் விடுதி மாணவிகளுக்கு மட்டும் ஒரு வார காலம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.