close
Choose your channels

மலையுச்சியில் சாகசம் செய்த போதை வாலிபர்கள். உடல்கூட கிடைக்காத பரிதாபம்

Thursday, August 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நார்மலாக இருக்கும் பலர் குடித்துவிட்டால் இரண்டு மனிதராக மாறிவிடுகின்றனர். குடிபோதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பலர் உயிரை விட்ட பரிதாப சம்பவங்கள் பல உண்டு.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆம்பொலி சுற்றுலா தளத்தில் 2 இளைஞர்கள் குடிபோதையில் செய்த விபரீதமான சாகசம் உயிரை பலிகொண்டது மட்டுமின்றி உடலை கூட கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த இரண்டு இளைஞர்களும் மலையுச்சியில் தடுப்பு சுவரையும் தாண்டி போதை தலைக்கேற ஒருவருக்கொருவர் சாகசம் செய்ய, அதை உற்சாகப்படுத்தி மற்றவர்கள் அந்த சாகசகத்தை வீடியோ எடுத்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் இருவரும் தடுமாறி மலையுச்சியில் இருந்து கீழே விழுந்துவிட்டனர். மேகங்கள் சூழ்நத அந்த பள்ளத்தாக்கில் அவர்கள் எங்கு விழுந்தார்கள் என்பதை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களுடைய உடலைக்கூட மீட்பது கடினம் என அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர்.
சுற்றுலா செல்வது இயற்கை காட்சிகளை கண்டு மனதிற்கு மகிழ்ச்சியை தேடி கொள்வதற்கு தானே தவிர, இப்படி குடித்துவிட்டு உயிரை இழப்பதற்கு அல்ல என்பதை இன்றைய இளைஞர்கள் எப்போது புரிந்து கொள்ள போகின்றார்களோ தெரியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.