close
Choose your channels

காதலியை தீ வைத்து, தானும் தீக்குளித்த கல்லூரி மாணவன்

Thursday, February 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேரளாவில் காதலியை கல்லூரி வளாகத்திலேயே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டு தானும் தீக்குளித்து மரணம் அடைந்த சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கேரள மாநிலத்தில் என்ற பகுதியில் இருக்கும் மகாத்மா காந்தி பல்கலைகழகத்தில் இயங்கி வரும் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் லட்சுமி என்ற மாணவியை அதே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் ஆதர்ஷ் என்பவர் கடந்த சில மாதங்களாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தார். ஆனால் இந்த காதல் விவரம் தெரிந்த லட்சுமியின் பெற்றோர் மகளை கண்டித்து படிப்பில் மட்டும் கவனம் செலுத்த அறிவுறுத்தினர்.

இதனை ஏற்றுக்கொண்ட லட்சுமி காதலை கைவிட முடிவு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆதர்ஷ், நேற்று கல்லூரிக்கு லட்சுமி வந்தபோது அவரை நூலகத்திற்கு அழைத்து சென்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். பின்னர் வெளியே வந்து தானும் தீக்குளித்தார்.

தீக்காயங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சையின் பலனின்றி இருவரும் இன்று காலை மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.