close
Choose your channels

கதிராமங்கலம் தீ சென்னைக்கும் பரவுகிறதா? மெரீனாவில் திடீர் போலீஸ் குவிப்பு!

Saturday, July 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கதிராமங்கலத்தில் நேற்று ஓஎன்ஜிசி எண்ணெய் நிறுவனத்தின் குழாய்களில் கசிவு ஏற்பட்டு அங்குள்ள வயல்களில் தீப்பற்றி எரிவதால் அப்பகுதி விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து பராமரிப்பு பணி செய்து வரும் ஓஎன்ஜிசி ஊழியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கதிராமங்கலம் கிராமத்தினர் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கதிராமங்கலம் கிராம மக்களுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இதனையடுத்து கதிராமங்கலத்தின் தீ, சென்னைக்கு பரவிவிடாமல் தடுக்க, சென்னை மெரீனாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 200க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போராட்டம் போன்று கதிராமங்கலம் மக்களுக்காக இளைஞர்கள் சென்னை மெரினால் கூடி போராட்டம் நடத்துவதை முன்கூட்டி தடுக்கவே முன்னெச்சரிக்கைக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.