close
Choose your channels

இளம் பெண் பொறியாளர் சுட்டுக் கொலை: காதலன் கைவரிசையா?

Thursday, June 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தலைநகர் டெல்லியை அடுத்த நொய்டா என்ற பகுதியில் அதிகாலையில் இளம்பெண் பொறியாளர் ஒருவர் அவர் தங்கியிருந்த வீட்டில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைச்சம்பவத்திற்கு கொல்லப்பட்ட இளம்பெண்ணின் காதலர் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

டெல்லியின் முன்னணி நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணிபுரியும் அஞ்சலி ரத்தோர் என்பவருக்கு இன்று அதிகாலை மொபைல்போனில் அழைப்பு வந்தது. போன் பேசிக்கொண்டே வீட்டின் கதவை திறந்து அவர் படியில் இறங்கியுள்ளார். அந்த சமயத்தில் மர்ம நபர் ஒருவர் அஞ்சலியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அஞ்சலியுடன் தங்கியிருந்த அவரது தோழிகள் உடனே கீழே வந்து பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார்,. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் நொய்டா எஸ்பி அருண் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தக் கொலைக்குப் பின்னால் அந்தப் பெண்ணின் காதலர் இருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.