close
Choose your channels

ஆரவ்வை தொவைச்சு காயப் போட்ருவேன்: ஜூலியின் ஆத்திரம் ஏன்?

Thursday, July 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வில்லியாக கிட்டத்தட்ட செயல்பட்டு வரும் ஜூலி, யாரையாவது குற்றம் சொல்லி கொண்டிருப்பதையே பிழைப்பாக கொண்டு வருகிறார். இதுவரை ஓவியாவை பற்றி அனைவரிடமும் குறை சொல்லி வந்த ஜூலி, தற்போது ஓவியாவிடம் நெருக்கமாக பழகும் ஆரவ்வை குறை சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

சற்று முன்னர் வெளிவந்த இன்றைய நிகழ்ச்சியின் புரமோ வீடியோவில் 'ஆரவ்வின் பெரிய மைனஸே அவன் ஓவியா கூட சேர்ந்ததுதான் என்று ஜூலி சொல்ல அதற்கு ரைசா, 'அது மைனஸ் இல்லைம்மா அதுதான் அவனுக்கு பெரிய ப்ளஸ்' என்று கூறுகிறார். அதற்கு ஜூலி, 'அப்படீன்னும் நீ நினைக்கிறியா, அப்படி இருந்தா அவனை தொவைச்சு காயப்போட்டிருவேன்' என்று ஆத்திரத்துடன் கூறுகிறார். பிக்பாஸ் வீட்டில் ஜூலி கொஞ்சம் கொஞ்சமாக தனித்து விடப்படுவதால் அவருடைய ஆத்திரம் அதிகமாகி கொண்டே வருவது இதன் மூலம் உறுதியாகிறது.

இந்த நிலையில் இந்த வாரம் ஆரவ் அல்லது ஜூலி இரண்டு பேரில் ஒருவர் வெளியேற வாய்ப்பு உள்ளதாக சக்தி கூறுகிறார். ஆனால் இந்த வாரம் எலிமினேஷனே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.