close
Choose your channels

ஆட்சி அமைக்கும் எண்ணிக்கையை நெருங்கியது ஓபிஎஸ் அணி. மேலும் 30 எம்.எல்.ஏக்கள் ஆதரவு

Saturday, February 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சமீபத்தில் மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் தன்னந்தனியாக தொடங்கிய போராட்டம் தற்போது ஆச்சரியப்படும் வகையில் வலுபெற்று கிளைமாக்ஸை நெருங்கிவிட்டது.

ஒரே ஒரு எம்.எல்.ஏ ஆதரவுடன் துணிச்சலாகவும், நம்பிக்கையுடனும் களமிறங்கிய முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு மூத்த அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் ஒவ்வொருவராக ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஏற்கனவே 39 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து இன்று மதியம் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் சற்றுமுன் நிலவரப்படி மேலும் 30 எம்.எல்.ஏக்கள் முதல்வருக்கு ஆதரவு கொடுத்துள்ளதாகவும், எனவே தற்போது முதல்வரையும் சேர்த்து 70 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் 48 எம்.எல்.ஏக்கள் மட்டுமே தேவை என்பதால் வெகுவிரைவில் அந்த நல்ல செய்தியும் வரும் என்று ஓபிஎஸ் அணியினர் நம்பிக்கையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.