close
Choose your channels

கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் மயக்கம். ஆம்புலன்ஸ் விரைந்தது

Monday, February 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை ஆதரிப்பாக கூறப்படும் 100க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் கடந்த ஒரு வாரமாக ஈசிஆர் சாலையில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தாங்கள் சுதந்திரமாக இருப்பதாக அங்குள்ள எம்.எல்.ஏக்கள் செய்தியாளர்களிடம் கூறினாலும், எம்.எல்.ஏக்களின் உண்மைத்தன்மை குறித்த நிலை இன்னும் தெரியவில்லை.
இந்நிலையில் ரிசார்ட்டில் உள்ள எம்.எல்.ஏக்கள் 8 பேர் திடீரென வாந்தி எடுத்து மயக்கத்தில் உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து மருத்துவக்குழுவினர்களுடன் கூடிய ஆம்புலன்ஸ் ஒன்று கூவத்தூர் ரிசார்ட்டுக்கு விரைந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.