close
Choose your channels

கூவத்தூர் எம்.எல்.ஏக்கள் சொல்லி கொடுத்ததை சரியாக சொல்கிறார்கள். பார்த்திபன்

Friday, February 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் ஆதரவு என கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏக்களில் ஒருசிலர் தொலைக்காட்சியில் பேட்டி அளித்து வருகின்றனர். இதுகுறித்தும் இன்றைய அரசியல் சூழல் குறித்தும் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

கூவத்தூரில் பக்கம் நான் போனேன். அந்தப் பக்கம் இருந்த மக்கள் எம்எல்ஏக்களை கெட்ட கெட்ட வார்த்தைகள் சொல்லி திட்டினார்கள். இந்த பொதுமக்களின் எதிர்ப்புக்கும் அவலநிலைக்கும் பின்னாடி ஒரு அரசாங்கம் அமைப்பது சரியா?

கூவத்தூரில் இருக்கும் எம்எல்ஏக்கள் சுதந்திரமாக இருப்பதாக திரும்ப திரும்ப சொல்கிறார்கள் என்றால் சொல்லிக் கொடுத்ததை சரியாக சொல்கிறார்கள் என்று அர்த்தம். ஒரு முறை சொன்னால் பரவாயில்லை. திரும்ப திரும்ப சொன்னால் கிளிப்பிள்ளை என்று அர்த்தம்' என்று கூறியுள்ளார்.

மேலும் சுப்ரீம் தீர்ப்பின்படி ஜெயலலிதாவும் குற்றவாளிதான். எடப்பாடி பழனிச்சாமியும், ஓ,பன்னீர்செல்வமும் அவர் கை காட்டியவர்தான். ஒரு குற்றவாளி கைகாட்டியவர்கள் நமக்கு முதல்வராக வேண்டாம்.

இந்த பிரச்சனைக்கு மறுதேர்தல்தான் சரியான வழி. மறுதேர்தலால்தான் மெரீனாவில் ஏற்பட்டது போன்ற புரட்சி ஏற்படும். மறுதேர்தலால் மக்கள் பணம் வீணாகும் என்று சிலர் சொல்லலாம். ஆனால் கூவத்தூரில் இருக்கும் எம்.எல்.ஏக்களின் பாதுகாப்புக்காக செலவிடப்படும் பணமும் வீண் தானே' என்று பார்த்திபன் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.