close
Choose your channels

மகளுக்கு புத்தாடை வாங்க 2 ஆண்டுகள் பிச்சை எடுத்த தந்தை.

Saturday, April 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு குழந்தைக்கு தாயின் பாசம் எந்த அளவுக்கு முக்கியமோ அதற்கு சிறிதும் குறைவில்லாதது தந்தையின் பாசம் என்பதை நிரூபிக்கும் வகையில் பிச்சைக்காரர் ஒருவர் தனது மகளுக்கு புத்தாடை அணிந்து அழகு பார்க்க இரண்டு ஆண்டுகள் பிச்சை எடுத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ஹூசைன் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தால் தனது வலது கையை இழந்தார். அதனால் அவரால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. இதனால் பிச்சை எடுத்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். ஒருநாள் தன் மகளுடன் ஜவுளிக்கடைக்குச் சென்ற அவர், மகளுக்கு புத்தாடை ஒன்றை வாங்கித்தர விரும்பினார் ஆனால், கடைக்காரர் அவரை பிச்சைக்காரன் என்பதால் விரட்டியிருக்கிறார். அவருடன் சென்ற மகள் தன் தந்தை அவதிக்கப்பட்டதைப் பார்த்து கண்ணீர் சிந்தியுள்ளார். மகளின் கண்ணீரை துடைக்க அன்றே முடிவு செய்த ஹூசைன் அன்று முதல் பிச்சை எடுக்கும் பணத்தின் ஒரு பகுதியை தனது மகளுக்கு புத்தாடை வாங்குவதற்காக சேமித்து வைக்க முடிவு செய்தார் தற்போது அவருடைய கனவு நனவாகிவிட்டது. ஆம், இரண்டு ஆண்டுகள் சிறுக சிறுக சேமித்து வைத்த ஹூசைன், மகளுக்கு புத்தாடை வாங்கி அதனை தனக்கு தெரிந்தவர் ஒரிவரிடம் இருந்து செல்போன் வாங்கி புகைப்படமும் எடுத்துள்ளார்.

தன்னுடைய கஷ்டம் எதுவுமே தனது மகள் அனுபவிக்க கூடாது என்பதற்காக மகளை படிக்க வைத்து கொண்டிருக்கும் ஹூசைன் அதற்கும் சிறுக சிறுக சேமித்து வைத்து கொண்டிருக்கின்றார். தான் ஒருநாள் புதிய செல்போன் வாங்கி அதில் மகளை விதவிதமாக புகைப்படம் எடுப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறும் ஹூசைன், பிச்சை எடுத்து மகளை படிக்க வைப்பது சவாலாக இருந்தாலும் மகளின் எதிர்காலத்தை கருதி தனது கஷ்டத்தை பொறுத்து கொள்வதாக கூறியுள்ளார். ஆனால் சில சமயம் தேர்வுக்கட்டணம் செலுத்த முடியாத நிலையில், மகள் தேர்வு எழுத முடியாத நிலை வரும்போது தான் படும் கஷ்டத்தை சொல்லி மாளாது என்று கண்ணீருடன் கூறுகிறார் ஹூசைன்

தான் பிச்சை எடுப்பதை தினம் தினம் பார்த்து மனதுக்குள் தனது மகள் கஷ்டப்படுவதை தான் உணர்வதாகவும், ஆனால் இன்று அவள் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் இருப்பதை பார்த்து தான் எல்லையில்லா ஆனந்தம் அடைவதாகவும் கூறுகின்றார்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை ஜி.எம்.பி.ஆகாஷ் என்ற புகைப்படக்கலைஞர் தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அத்துடன் ஹூசைன் தன் மகளை புத்தாடையுடன் மொபைலில் புகைப்படம் எடுப்பது போன்ற படத்தையும் பகிர்ந்திருக்கிறார்,. இந்த ஒரே ஒரு புகைப்படம் ஆயிரம் அர்த்தங்கள் சொல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.