close
Choose your channels

திருமணத்திற்கு முன் கேட்ட 2 கேள்விகள்: ஏ.ஆர்.ரஹ்மான் மனைவியின் முதல் பேட்டி

Tuesday, July 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் முதன்முதலில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி, தனது கணவரிடம் முதன்முதலில் கேட்ட இரண்டு கேள்விகள் மற்றும் அவரது குணங்கள் குறித்து மனம் திறந்து கூறினார்.

நான் முதன்முதலில் ரஹ்மான் அவர்களை அவருடைய அம்மா மற்றும் சகோதரிகளுடன் வந்திருந்தபோது சந்தித்தேன். என்னை முதலில் சந்தித்தபோது, 'என்னை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா? என்று கேட்டார். அதற்கு நான் ஆமாம் என்று சொல்லியதோடு அது என் பெற்றோர்களின் விருப்பம் என்று கூறினேன்.

அப்போது நான் அவரிடம் இரண்டு கேள்விகள் மட்டும் கேட்டேன். ஒன்று உங்களுக்கு ஆங்கிலத்தில் பேச தெரியுமா? இரண்டாவது கார் ஓட்ட தெரியுமா? இரண்டு கேள்விகளுக்கும் அவர் தெரியும் என்றார்.

அவர் எப்போதும் கடவுளை மட்டுமே நேசிப்பதாக சொல்வார். என்னை இருசக்கர வண்டியில் அழைத்து செல்லும் கணவரைத்தான் நான் எதிர்பார்த்தேன். கடந்த சில நாட்களாக என்னை இரவு 12 மணிக்கு டூவிலரில் அழைத்து செல்கிறார்.

நான் அவரை பற்றி சில விஷயங்கள் கூற வேண்டும். அவர் ஒரு நல்ல மனிதர். அற்புதமானவர், அடக்கமானவர், நல்ல தந்தை, மிகவும் இனிமையானவர், நகைச்சுவை குணம் உடையவர், நல்ல அன்புள்ள அப்பா மற்றும் நல்ல கணவரும் கூட, அப்புறம் உலகின் மிகச்சிறந்த மகன்' என்று கூறினார்.

இதே நிகழ்ச்சியில் மனைவி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறியபோது 'என்னோட குழந்தைகளுக்கு அழகான அம்மா, அதுவே இந்த நாட்களில் மிகப்பெரிய பரிசு, கம்பீரமானவர், நிறைய நல்ல குணங்கள் கொண்டவர், மற்றும் நல்ல டான்சர்' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.