close
Choose your channels

சொந்த வீடு உள்ளவர்களுக்கு மத்திய அரசின் ஆதார் ஆப்பு!

Tuesday, June 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கு ஆதார் அட்டை என்பது கட்டாயம் என்றும் ஆதார் அட்டை இல்லாமல் வரும் காலத்தில் எந்த ஒரு செயலையும் செய்ய முடியாத நிலை வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்பொழுதே வங்கி கணக்கு தொடங்குவது முதல் பான் அட்டை பெறுவது வரை அனைத்திற்கும் ஆதார் அட்டை கேட்கப்படுகிறது.

இந்த நிலையில் 1950ஆம் ஆண்டிற்கு பின்னர் சொந்தமாக நிலம், வீடு வாங்கியவர்கள் தங்களுடைய நில ஆவணங்களோடு ஆதார் எண்ணை கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்று நில உரிமையாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் விவசாய நிலமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார் எண் இணைக்காதவர்கள் மீது பினாமி பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இதுகுறித்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், ' 1950ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட எந்த ஒரு நில ஆவணத்தையும் அது விவசாய நிலம் அல்லது விவசாய பயன்பாடு இல்லாத நிலம், வீடுகள் என எதுவாக இருந்தாலும், வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதிக்குள் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும். அத்துடன் நில ஆவணங்களுடன், நில உரிமையாளரின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அப்படி இணைக்கப்படாத நில ஆவணங்கள், பினாமி பரிமாற்ற( தடுப்பு) திருத்த சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்பட்டதாக கருதப்படும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.