close
Choose your channels

இனி அஞ்சலகங்களிலும் ஆதார் அட்டை. புதிய அறிவிப்பு

Saturday, July 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகன்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்று கடந்த சில வருடங்களாகவே மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. தற்போது ஆதார் அட்டைகள் மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஆதார் அட்டை கிடைப்பதிலும், ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதிலும் காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்
இந்த நிலையில் அஞ்சல் நிலையங்களில் புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கவும், ஆதார் அட்டையில் திருத்தம் செய்யவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல்துறை அறிவித்துள்ளது. முதல்கட்டமாக சென்னையில் அண்ணா சாலை, தி.நகர், மயிலாப்பூர், பரங்கிமலை, பூங்கா நகர் ஆகிய தலைமை அஞ்சல் நிலையங்களிலும், தேனாம்பேட்டை, அண்ணாநகர், அசோக்நகர், திருவல்லிக்கேணி ஆகிய துணை அஞ்சல் நிலையங்களிலும் ஆதார் அட்டை பெறுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதி படிப்படையாக தமிழகம் முழுவதிலும் உள்ள அஞ்சல் நிலையங்களில் அறிமுகம் செய்யப்படும் என்றும், இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறும் அஞ்சல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.