close
Choose your channels

கே.எஸ்.ரவிகுமாரின் அடுத்த பட நாயகன் அறிவிப்பு

Wednesday, March 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல், ரஜினி உள்பட பிரபல நடிகர்களின் படங்களை இயக்கி கடந்த பல வருடங்களாக கமர்ஷியல் மற்றும் வெற்றி பட இயக்குனராக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் என்பது அனைவரும் அறிந்ததே. இவரது இயக்கத்தில் சுதீப் நடித்த 'முடிஞ்சா இவன பிடி' படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. தற்போது அவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

கே.எஸ்,ரவிகுமாரின் அடுத்த பட நாயகன் நடிகர் ஆதி. 'மிருகம்', ஈரம், அரவான், உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்த ஆதி, சமீபத்தில் கே.எஸ்.ரவிகுமாரை சந்தித்ததாகவும், கே.எஸ்.ரவிகுமார் கூறிய கதை ஆதிக்கு மிகவும் பிடித்துவிட்டதால் உடனே அவரது இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்கவுள்ள நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. கமர்ஷியல் மற்றும் பொழுதுபோக்கு படமாக உருவாகவுள்ள இந்த படத்தை ரிக்வேதா கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.