close
Choose your channels

ஹரிகுமாரின் இரட்டை வேடம் படம் 'மதுரை மணிக்குறவன்"

Wednesday, August 19, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தூத்துக்குடி மற்றும் மதுரை சம்பவம்' ஆகிய படங்களில் நடித்த ஹரிகுமார் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'மதுரை மணிக்குறவன்'. தியாகராஜன் நடித்த 'மலையூர் மம்பட்டியான்' மற்றும் நெபோலியன் நடித்த 'சீவலப்பேரி பாண்டி' போன்று இந்த படமும் நிஜத்தில் ஏழை மக்களுக்காக மதுரை நகரில் வாழ்ந்த ஒருவரின் உண்மைக்கதை என்றும், இப்போதும் அவருக்கு மதுரை தத்தனேரி பகுதியில் சிலை உள்ளது என்றும் படக்குழுவினர் கூறுகின்றனர்.

இந்த படத்தில் மணிக்குறவன் மற்றும் போலீஸ் என இரண்டு கேரக்டரில் ஹரிகுமார் நடித்து வருவதாகவும், இரண்டு கேரக்டர்களுமே ஒன்றுக்கொன்று வித்தியாசமானது என்றும் கூறப்படுகிறது. தற்போது மணிக்குறவன் கேரக்டரின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும், இன்னும் சில நாட்களில் போலீஸ் கேரக்டரின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் ஹரிகுமார் கூறியுள்ளார்.

ஹரிகுமாருக்கு ஜோடியாக மாதவி லதா நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக சுமன் நடிக்கின்றார். மேலும் இந்த படத்தில் பருத்திவீரன்" சரவணன், எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ் உள்பட பலர் நடிக்கின்றனர். ராஜரிஷி இயக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கின்றார். இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.