close
Choose your channels

விவசாயிகளுக்காக செயலில் இறங்கிய நடிகை சினேகா

Monday, April 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக விவசாயிகள் கடந்த 41 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்திய நிலையில் இந்த போராட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அவர்கள் இன்று அல்லது நாளை தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் தமிழக விவசாயிகள் 40 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தியும் மத்திய அரசு எந்த உறுதிமொழியையும் விவசாயிகளுக்கு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நலிந்த விவசாயிகளுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்வோம் என்ற நோக்கத்தில் Friends Of Farmers என்ற அமைப்பை நடிகர் விஷால் தொடங்கி இதன்மூலம் பத்து நலிந்த விவசாயிகளுக்கு சமீபத்தில் நடிகர் விஷால் உதவி செய்திருந்தார்.

இந்த நிலையில் இதே அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மற்றொரு நிகழ்ச்சியில் நட்சத்திர தம்பதிகள் பிரசன்னா-சினேகா, நலிந்த 10 விவசாயிகளுக்கு உதவும் வகையில் ரூ.2 லட்சத்தை நன்கொடையாக அளித்தனர். பிரசன்னா-சினேகா தம்பதிகளின் இந்த நன்கொடையை பி. பழனியாண்டி, வி.மூக்காயி, என்.தங்கராஜ், கே.ராஜி, ஆர். வெங்கடாசலம், பி. கணேசன், ஜி. மகாதேவன், ஆர்.சதாசிவம், பி.சிலம்பாயி /பழநிசாமி, ஜான் மைகேல் ராஜ் ஆகிய 10 விவசாயிகள் பெற்றுக்கொண்டனர்.

நலிந்த விவசாயிகளுக்கு அரசுதான் உதவ வேண்டும் என்று காத்திருக்காமல், வசதி படைத்தவர்களும் திரைப்பட உலகினர்களும், தொழில் அதிபர்களும் தங்களால் முடிந்த உதவியை விவசாயிகளுக்கு செய்தால் விவசாயிகளின் துயர் துடைக்கப்படும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.