close
Choose your channels

தெர்மோகோலை அந்தம்மா மேல போட்டிருந்தால் உயிர் பிழைத்திருப்பாங்க. ராதாரவி கிண்டல்

Tuesday, April 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக அமைச்சர் ஒருவர் வைகை அணையின் நீர் ஆவியாகாமல் இருக்க தெர்மோகோலை போட்டு மூட செய்த முயற்சி கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த விஷயம் குறித்து திரைத்துறையினர்களும் பேச ஆரம்பித்துவிட்டனர்.

நேற்று நடந்த 'சங்கிலி புங்கிலி கதவ தொற' இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராதாரவி, 'கமல்ஹாசனும் நானும் டவுசர் போட்ட காலத்தில் இருந்தே நண்பர்கள். அவர் இந்த மேடையில் தெர்மோகோல் குறித்து பேசியபோது எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது. இந்த தெர்மோகோல் ஐடியா முன்பே வந்திருந்து அந்தம்மா மேல் போட்டிருந்தால் அவருடைய ஆவி போயிருக்காதே என்றுதான் எனக்கு தோன்றியது. ஏனெனில் அந்தம்மா கட்சியில் இருந்த நன்றி விசுவாசத்தால் இதை கூறுகிறேன்' என்று ராதாரவி கூறியவுடன் பலத்த சிரிப்பொலி ஏற்பட்டது.

மேலும் தனக்கு எப்போதுமே மேடையில்தான் அரசியல் பேசி பழக்கம் என்றும் டுவிட்டரில் அரசியல் பேசுவதில்லை என்றும் ராதாரவி கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.