close
Choose your channels

இனிமேல் அரசியலுக்கு வரும் நடிகர்கள் தோல்வியடைவார்கள்: திருமுருகன் காந்தி

Sunday, September 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், விஷால் உள்பட திரைநட்சத்திரங்கள் பலர் மிக விரைவில் அரசியல் களம் புகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் கமல்ஹாசன் முந்திவிடுவார் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் என்ற அடையாளத்தை மட்டும் வைத்து கொண்டு எந்த வித போராட்டத்திலும் கலந்து கொள்ளாமல் அரசியலுக்கு வருபவர்களை சீமான் உள்பட பல அரசியல்வாதிகள் கண்டித்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நடிகர்களின் அரசியல் குறித்து கூறியபோது, 'நடிகர்கள் என்ற அடையாளத்தை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலுக்கு வந்தால் நடிகர்கள் தோல்வியடைவார்கள். மக்கள் போராட்டங்களில் கலந்து கொள்ளாதவர்களுக்கு மக்கள் வாய்ப்பளிக்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.