close
Choose your channels

மலையாள நடிகை பாலியல் வழக்கு: காவ்யா மாதவனிடம் போலீசார் விசாரணை

Wednesday, July 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல மலையாள நடிகை ஒருவரின் பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய ஜாமீன் மனு நேற்று கேரள ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு திலீப்பின் இரண்டாவது மனைவி காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடமும் தற்போது விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணை அலுவாலில் உள்ள திலீப் வீட்டில் நடந்தது. அவரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டு அதன்பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையில் போலீசார் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலையாள நடிகை பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பல்சர்சுனிலுக்கு நடிகை காவ்யா மாதவன் பணம் கொடுத்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.