close
Choose your channels

உடை மாற்றும் அறையில் பிரபல நடிகைக்கு நேர்ந்த விபரீதம். படக்குழு அதிர்ச்சி

Saturday, April 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை மயிலாப்பூரில் உள்ள வீடு ஒன்றில் அடிக்கடி படப்பிடிப்பு நடைபெறுவது வழக்கம். திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல் படப்பிடிப்புகள் அதிகம் நடைபெறும் இந்த வீட்டில் பிரபல தொலைக்காட்சி சீரியல் ஒன்றின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது.

பிரபல முன்னணி டிவி சீரியல் நடிகை ஒருவர் நடித்த காட்சி படப்பிடிப்பு நடந்தபோது அடுத்தகாட்சிக்காக உடைமாற்றுவதற்காக அவர் ஒரு அறைக்கு சென்றார். அங்கு அவர் உடைமாற்றி கொண்டிருந்தபோது தற்செயலாக தான் உடைமாற்றுவதை ஒரு வாலிபர் தனது செல்போனில் படம் எடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அந்த நடிகை கூச்சலிட படக்குழுவினர் விரைந்து வந்து அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவருடைய செல்போனை வாங்கி உடைத்துவிட்டு எச்சரிக்கை செய்து அனுப்பிவிட்டார்களாம். இந்த விஷயம் வெளியே தெரிந்தால் நடிகைக்கு சிக்கல் ஏற்படுவது மட்டுமின்றி அந்த வீட்டின் வருமானத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்று கருதி படக்குழுவினர் மற்றும் வீட்டின் உரிமையாளரும் சேர்ந்து காவல்துறைக்கு இதுகுறித்து எந்தவித புகாரும் கொடுக்கவில்லையாம்.

இதே வீட்டில்தான் பிரபல திரைப்பட நடிகைகள் நடித்த படப்பிடிப்புகள் அதிகம் நடந்துள்ளதால் அந்த வாலிபரிடம் போலீஸ் அவர்களது பாணியில் விசாரணை செய்தால் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.