close
Choose your channels

ரஜினி, கமல் பட நடிகையின் கணவர் திடீர் தற்கொலை

Wednesday, March 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த பிரபல நடிகை ஜெயசுதாவின் கணவர் நிதின்கபூர் நேற்றிரவு திடீரென அவரது வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிவாஜி கணேசன் நடித்த பட்டாகத்தி பைரவன்', ரஜினிகாந்த் நடித்த 'பாண்டியன்', கமல்ஹாசன் நடித்த 'சொல்லத்தான் நினைக்கின்றேன்' மணிரத்னம் இயக்கிய 'அலைபாயுதே' உள்பட ஏராளமான தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நாயகி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தவர் நடிகை ஜெயசுதா. இவர் கடந்த 1985ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் சகோதரர் நிதின்குமாரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஷ்ரேயன், நிஹர் என்ற இருமகன்கள் உள்ளனர்.

பிரபல தயாரிப்பாளரான நிதின்குமார் சமீபத்தில் தனது மகன் ஷ்ரேயன் நடித்த படம் ஒன்றை தயாரித்தார். இந்த படம் படுதோல்வி அடைந்ததால் அவருக்கு பணநெருக்கடி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும், இதன் காரணமாக நேற்று மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.