close
Choose your channels

அழுகிய நிலையில் கேட்பாரற்று கிடந்த நடிகையின் பிணம்

Tuesday, June 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் நடிகை ஒருவரின் பிணம் அழுகிய நிலையில் அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த கிருத்திகா செளத்ரி என்பவர் பாலிவுட் நடிகையாகும் ஆசையில் கடந்த சிலவருடங்களுக்கு முன் மும்பை வந்தார். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த கிருத்திகா, 'கங்கனா ரனாவத் நடித்த படம் ஒன்றில் சிறு கேரக்டரில் நடித்தார். மேலும் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும், மாடலிங் தொழிலும் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென கடந்த சில நாட்களாக காணவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கிருத்திகா தங்கியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக பக்கத்து வீட்டினர் கொடுத்த தகவலின்பேரில் மும்பை போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனார். அங்கு கிருத்திகாவின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. உடனடியாக பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுபி வைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில் கிருத்திகாவை மர்ம நபர்கள் கொலை செய்திருக்கலாம் என்றும் இந்த கொலை நடந்து மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகியிருக்கலாம் என்றும் வீட்டின் கதவு முன்பக்கம் பூட்டியிருந்ததால் யாருக்கும் இதுகுறித்து சந்தேகம் எழவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.