close
Choose your channels

நடிகை ரம்பாவின் 2வது குழந்தையின் பெயர் அறிவிப்பு

Saturday, July 4, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

"உள்ளத்தை அள்ளித்தா" படத்தின் மூலம் 2000ஆம் ஆண்டுகளில் இளைஞர்களின் உள்ளங்களை கவர்ந்த நடிகை ரம்பா, கடந்த 2010ஆம் ஆண்டு கனடா தொழிலதிபர் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அந்நாட்டிலேயே செட்டில் ஆனார். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் குழந்தையும், கடந்த மார்ச் 31ஆம் தேதி இரண்டாவது குழந்தையும் ரம்பாவுக்கு பிறந்தது.


இந்நிலையில் இரண்டாவது குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் முடிந்த நிலையில் தற்போது அந்த குழந்தைக்கு ரம்பா தம்பதியினர் பெயர் வைத்துள்ளனர். இரண்டாவது குழந்தைக்கு ரம்பா தேர்வு செய்த பெயர் 'சாஷா' என்பதாகும். இந்த தகவலை தனது சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ள ரம்பா, கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றையும் அதில் பதிவு செய்துள்ளார். ரம்பாவின் முதல் குழந்தையின் பெயர் லாவண்யா என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரம்பாவுக்கும் அவரது கணவருக்கும் கருத்துவேறுபாடு என்றும், இருவரும் பிரியவுள்ளார்கள் என்றும் சமீபத்தில் கிளம்பிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ரம்பா, கணவர் மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக உள்ள இந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.