கூவத்தூர் விடுதியில் நடப்பது என்ன? காஞ்சிபுரம் ஏ.டி.எஸ்.பி. தமிழ்செல்வன் பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
அதிமுக எம்.எல்.ஏக்களை சசிகலா தரப்பு கூவத்தூரில் உள்ள நட்சத்திர விடுதியில் அடைத்து வைத்திருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்த வழக்கு ஒன்று நேற்று நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டதை அடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் காஞ்சிபுரம் ஏ.டி.எஸ்.பி. தமிழ்செல்வன் இன்று நேரடியாக கூவத்தூர் சென்று அங்கு தங்கியிருந்த எம்.எல்.ஏக்களிடம் அவர்களுடைய கருத்தை கேட்டறிந்தார்.
கூவத்தூர் விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியதாகவும், சுய விருப்பத்தின் பேரிலேயே விடுதியில் அவர்கள் தங்கியிருந்ததாக தெரிவித்ததாகவும், தங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என அங்கு தங்கியிருந்த எம்.எல்.ஏக்கள் தெரிவித்ததாகவும் காஞ்சிபுரம் ஏ.டி.எஸ்.பி. தமிழ்செல்வன் சற்று முன்னர் பேட்டியளித்துள்ளார். மேலும் எம்.எல்.ஏக்களின் எழுத்துபூர்வ ஆவணங்களை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கூவத்தூர் நட்சத்திர விடுதியை தவிர பண்ணை வீடு ஒன்றிலும் எம்எல்ஏக்கள் தங்கியுள்ளதாக வந்த தகவலை அடுத்து டிஎஸ்பி எட்வர்டு தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு சென்று ஆய்வு நடத்தி வருவதாகவும், இங்குள்ள எம்.எல்.ஏக்களின் நிலை மிக விரைவில் தெரியவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.