close
Choose your channels

கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் அமளி. இரு அவைகளும் ஒத்திவைப்பு

Thursday, February 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் வகையில் உடனடியாக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர்ராவ், தமிழகம் திரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமளி செய்து வருகின்றனர்.

மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அதிமுக எம்பிக்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று அமளி செய்தனர். ஆனால் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து பேச இரு அவைகளின் சபாநாயகர்களும் அனுமதி அளிக்க மறுத்துவிட்னர்.

இந்த அமளி காரணமாக மக்களவை சில மணி நேரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதேபோல் மாநிலங்களவையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் பாராளுமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.