close
Choose your channels

பாகுபலி'க்கு பின் மீண்டும் ஒரு சரித்திர படத்தில் சத்யராஜ்-ராணா

Thursday, April 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களிலும் முக்கிய கேரக்டர்களில் நடித்த சத்யராஜ் மற்றும் ராணா மீண்டும் ஒரு வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளனர்.

இந்த முறை அவர்கள் நடிக்கவுள்ளது சுதந்திரத்திற்கு முன்னர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில் நடைபெற்ற சம்பவத்தின் அடிப்படையாக கொண்ட கதையில் என்பது குறிப்பிடத்தக்கது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 'இந்திய தேசிய ராணுவத்தின் படைவீரர்களாக சத்யராஜ், ராணா இருவரும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் தயாராகவுள்ள இந்த படத்தின் தமிழ் டைட்டில் 'மடை திறந்து' என்றும், தெலுங்கு டைட்டில் '1942' என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த படத்தை சத்யசிவா என்பவர் இயக்கவுள்ளார். இன்றைய இளையதலைமுறையினர் நேதாஜியின் இந்திய சுதந்திர போராடத்தை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.