close
Choose your channels

ஒவ்வொரு ரசிகரையும் ஆரத்தழுவி மகிழ்கிறேன். 'பாகுபலி 2' வெற்றிக்கு பிரபாஸ் நன்றி

Monday, May 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய திரையுலகில் ரூ.1000 கோடி வசூல் செய்த படம் கொடுத்த ஒரே நாயகன் என்ற பெருமையை பெற்றவர் 'பாகுபலி' புகழ் பிரபாஸ். இந்த படங்களின் இரண்டு பாகங்கள் வருவதற்கு முன்னர் தெலுங்கு மாநிலங்களில் மட்டுமே பிரபலமாக இருந்த பிரபாஸ், இந்த இரண்டு படங்களுக்கு பின்னர் உலகமே பேசும் நாயகனாகிவிட்டார். திருட்டு விசிடி உள்பட பல பிரச்சனைகளை தாண்டி ஒரு திரைப்படம் ரூ.100, ரூ.200 கோடி வசூல் செய்வதே சவாலான இந்திய திரையுலகில் ஒரு திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்துள்ளது என்பது, அதுவும் ரிலீஸ் ஆன பத்தே நாட்களில் இந்த வசூலை செய்துள்ளது என்பது உண்மையிலேயே இந்திய சினிமாவின் சரித்திர சாதனைதான்.

இத்தகைய வெற்றியை பெற்றுத்தந்த ரசிகர்களுக்கு 'பாகுபலி' நாயகன் பிரபாஸ் தனது நன்றியை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: மகத்தான இந்த தருணத்தில் என்னுடைய ஒவ்வொரு ரசிகரையும் ஆரத்தழுவி மகிழ்கிறேன். அவர்கள் என்மீது வைத்துள்ள அன்பில் திளைத்து நெகிழ்ந்து போய் இருக்கிறேன். நான் சிரமேற்கொண்டு எடுத்த அத்தனை முயற்சிகளும் படக்காட்சிகளில் சிறப்பாக அமைந்து, இந்தியா மட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள உங்களுடைய பேரன்பைப் பெற்று தந்துள்ளது.

மேலும் இத்தனைப் பிரம்மாண்டமான ஒரு வரலாற்றுக் காவியத்தில், என் மீது நம்பிக்கை வைத்து, என்னையும் இந்த பயணத்தில் இணைத்துக்கொண்டு, எனக்கொரு முக்கிய பங்களித்து, என்னை ஊக்குவித்து சிறப்புற இயக்கி, இந்த மாபெரும் வெற்றிக்கு வித்திட்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி அவர்களுக்கு மகிழ்ச்சியோடும், நெகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன்' இவ்வாறு பிரபாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.