close
Choose your channels

'பாகுபலி 2' வெற்றியை அடுத்து ராஜமெளலியின் அடுத்த பயணம் ஆரம்பம்

Tuesday, May 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் மிக அபாரமான வசூலை பெற்று வருகிறது. வெளியான நான்கே நாட்களில் ரூ.500 கோடி என்ற வசூலை தொட்டுவிட்ட நிலையில், ஏற்கனவே எதிர்பார்த்த ரூ.1000 கோடி வசூலை மிக விரைவில் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் எஸ்.எஸ்.ராஜமெளலி மட்டுமின்றி அவரது குடும்பமே இந்த படத்திற்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக ஓய்வின்றி உழைத்துள்ளனர். எனவே தற்போது படம் வெளியாக வெற்றியும் பெற்றுவிட்டதால் ரிலாக்ஸ் ஆக இருக்கும் ராஜமெளலியும் அவரது குடும்பத்தினர்களும் ஓய்வு எடுக்க நேற்று லண்டனுக்கு பயணமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

லண்டனில் பத்து நாட்கள் ராஜமெளலி தனது குடும்பத்தினர்களுடன் ஓய்வு எடுத்துவிட்டு பின்னர் நாடு திரும்புவார் என்றும், அதன் பின்னர் அவர் தனது அடுத்த படம் குறித்து முடிவு செய்வார் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.