close
Choose your channels

இரு அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை. ஓபிஎஸ் முக்கிய தகவல்

Tuesday, April 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஓபிஎஸ் முதல்வர் பதவியேற்று ஆட்சியை நடத்தி கொண்டிருந்தார். ஆனால் கட்சி, ஆட்சி இரண்டையும் தனது கைக்குள் இருக்க வேண்டும் என்று சசிகலா ஆசைப்பட்டதன் விளைவு அதிமுக, சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது. இதனால் கட்சியின் பெயர் மற்றும் சின்னமும் முடக்கப்பட்டது.
இந்த நிலையில் சசிகலாவுக்கு சிறை, தினகரன் மீதான விசாரணை என கட்சிக்கு தொடர்ந்து கெட்ட பெயர் வந்ததால் மூத்த அமைச்சர்கள் சசிகலா குடும்பத்தினர்களை கட்சியில் இருந்து ஓரங்கட்டிவிட்டு மீண்டும் ஓபிஎஸ் அணியுடன் இனைந்து ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க முடிவு செய்தனர்.
இதன் காரணமாக இரண்டு அணியிலும் ஏழுபேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு இணைப்புக்கான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற இருந்ததாக தகவல்கள் வந்தது. ஆனால் இரு அணிகளும் இணைந்துவிட கூடாது என்று ஒருசிலர் செய்த சூழ்ச்சியால் நேற்றைய பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறவில்லை. இந்நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், இருதரப்பிலும் பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழல் கனிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே எந்த நேரமும் இணைப்புகான பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.