close
Choose your channels

சசிகலா நடவடிக்கைக்க்கு எதிர்ப்பு. கூண்டோடு ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகிகள்

Thursday, February 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அணி, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அணி என இரண்டு அணிகளாக அதிமுக தற்போது செயல்பட்டு வருகிறது. யார் ஆட்சியை பிடிப்பது என்ற பரபரப்பு தற்போது உச்சக்கட்டத்தில் உள்ளது.
இந்நிலையில் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு புதுச்சேரியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஒம்சக்தி சேகர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசிகலா நீக்கினார்.
சசிகலாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லித்தோப்புத் தொகுதி அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். மேலும் புதுச்சேரி மாநில மருத்துவ அணி நன்னன் தலைமையிலான உறுப்பினர்களும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் புதுச்சேரி லெனின் சாலையில் சசிகலாவுக்கு எதிராக அதிமுகவினர் சாலைமறியல் செய்து போராட்டம் நடத்தி வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.
ஒருபக்கம் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு வலுத்துவருவதாகவும், இன்னொரு பக்கம் சசிகலாவுக்கு பொதுமக்கள் மத்தியில் இருந்து மட்டுமின்றி அதிமுகவின் நிர்வாகிகள் மத்தியிலும் பலத்த எதிர்ப்பு வலுத்துவருவதாகவும் அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்தும் தெரிந்து கொள்ள முடிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.