close
Choose your channels

இடம் மாறினார் ஓபிஎஸ். தொண்டர்கள் வாழ்த்து

Thursday, March 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சசிகலாவின் அதிகாரத்தில் இருந்து பிரிந்து வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக பொதுப்பணித்துறையில் இருந்து வீட்டை காலி செய்யும்படி நோட்டீஸ் வந்தது.
இதனையடுத்து ஓபிஎஸ் போயஸ் கார்டனில் உள்ள புதிய வீட்டுக்கு குடியேறுவார் என்று கூறப்பட்டது. ஆனால் கிரீன்வேஸ் சாலை அரசு இல்லத்தை இன்று காலி செய்த ஓபிஎஸ் சற்று முன்னர் ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள புது வீட்டுக்கு குடியேறினார். புதிய வீட்டுக்கு குடியேறியுள்ள ஓபிஎஸ் அவர்களுக்கு அதிமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்ய கமிஷன் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று ஓபிஎஸ் அணியினர் நடத்திய உண்ணாவிரதம் வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து, விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களையும் தொண்டர்களையும் ஓபிஎஸ் நேரடியாக சந்திக்கவுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.