close
Choose your channels

ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ-எம்பி. மொத்த எண்ணிக்கை 8-12 ஆனது

Tuesday, February 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் கடந்த வாரம் ஜெயலலிதா நினைவகத்தில் அரை மணி நேரம் செய்த தியானம், தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பிவிட்டது. ஆட்சியை பிடிப்பது யார்? என்ற அதிகார போட்டியின் கிளைமாக்ஸ் நாளை தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு 7 எம்.எல்.ஏக்களும், 11 எம்பிக்களும், அதிமுகவின் மூத்த நிர்வாகிகளும் இதுவரை ஆதரவு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் சற்று முன்னர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளார். அதேபோல் மதுரை எம்பி கோபாலகிருஷ்ணன் அவர்களும் முதல்வருக்கு ஆதரவு கொடுத்துள்ளார். எனவே ஓபிஎஸ் அணிக்கு 8 எம்.எல்.ஏக்களூம், 12 எம்பிக்களும் ஆதரவு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள் சுதந்திரமாக வெளியே வந்தால் இன்னும் பல எம்.எல்.ஏக்கள் முதல்வருக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று அதிமுகவின் தொண்டர்கள் வட்டாரம் தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.