close
Choose your channels

தைரியம் இருந்தால் கமல் அரசியலுக்கு வரட்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

Monday, July 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, 'தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து வருவதாகவும், ஊழல் விஷயத்தில் பீகாரை தமிழகம் மிஞ்சிவிட்டதாகவும் கூறினார்.
கமல்ஹாசனின் இந்த கருத்து ஆட்சியாளர்களை ஆத்திரப்படுத்தியது. தமிழக அமைச்சர்கள் கமலுக்கு எதிர்ப்பும், மிரட்டலும், பதிலடியும் விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நிதியமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தப்போது, 'தமிழக அரசை விமர்சிக்கும் நடிகர் கமல்ஹாசன், அரசியலுக்கு வந்து சாதிக்கட்டும். தைரியம் இருந்தால் அரசியலுக்கு வந்து கருத்து சொல்லட்டும்'' என்று கூறினார்.
மேலும் திமுகவுக்கு தற்போது நடிகர் கமலின் தயவு தேவைப்படுகிறது. திமுகவை தாங்கி பிடிக்கும் முட்டுக்கட்டையாக கமல் தேவைப்படுகிறார். திமுகவின் நிலைமை இந்த அளவுக்கு ஆகிவிட்டது எனக்கு வருத்தமாக இருக்கின்றது. இன்று ஸ்டாலினுக்கு கமலின் உதவி தேவைப்படுவதால் அவர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்' என்று கூறினார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.