close
Choose your channels

ஈசிஆர் ரிசார்ட்டில் நடப்பது என்ன?

Thursday, February 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒருபக்கம் அடுத்த முதல்வர் யார் என்ற ரேஸில் முந்தப்போவது ஓபிஎஸ் அவர்களா? சசிகலா அவர்களா? என்ற பரபரப்பில் தமிழகமே இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் முதல்வரை தேர்வு செய்ய வேண்டிய அதிமுக எம்.எல்.ஏக்கள் எங்கு, எப்படி உள்ளார்கள் என்பது குறித்து வெளிவந்த தகவல்களை பார்ப்போம்.

ஈசிஆரில் உள்ள ஆடம்பர ரிசார்ட் ஒன்றில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த ரிசார்ட்டில் உள்ள அனைத்து அறைகளையும் அவர்கள் எந்தவித பணமும் கொடுக்காமல் ஆக்கிரமித்து கொண்டதாக ரிசார்ட் மேனேஜ்மெண்ட் ஒருபக்கம் புலம்புகின்றனர்.

இன்னொரு பக்கம் எம்.எல்.ஏக்கள் கூண்டுக்கிளியை போல அடைத்து வைக்கப்பட்டுள்ளார்களாம். அவர்களுக்கு தேவையான உணவுகளை வாங்க அவர்களுடைய டிரைவர்கள் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்களாம்.

அதுமட்டுமின்றி எம்.எல்.ஏக்கள் ஒருசிலருக்கு மதுபானங்களும் வழங்கப்பட்டு வருவதாகவும், சசிகலாவுக்கு மட்டுமே ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அவர்கள் மூளைச்சலவை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ரிசார்ட்டில் உள்ள ஊழியர்கள் அனைவரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும், ஏன் குறைந்தபட்சம் அவர்கள் செல்போனைகூட உபயோகிக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 75 நாள் அப்பல்லோ போல இந்த ரிசார்ட் தற்போது இருப்பதாக கூறப்படுகிறது.

எம்.எல்.ஏக்கள் எப்போது ரிசார்ட்டை விட்டு செல்வார்கள், இன்று இரவும் அங்கேயே தங்குவார்களா? என்பது உள்பட எந்த விபரமும் ரிசார்ட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி யாருக்குமே தெரியாத புதிராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.