close
Choose your channels

ஓபிஎஸ் அவர்களுக்கு புதிய பதவி: ஈபிஎஸ் அறிவிப்பு

Monday, August 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிமுக தொண்டர்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைப்பு சற்றுமுன் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அணிகள் இணைப்பின் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ் அவர்கள், 'நாம் அனைவரும் ஜெயலலிதா என்ற ஒருதாய் மக்கள். நம்மை யாராலும் பிரிக்க முடியாது. என மனதில் இருந்த பாரம் இன்றுடன் குறைந்துவிட்டது.
ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க இன்று இந்த இணைப்பு நிகழ்ந்துள்ளது. 45 ஆண்டுகாலம் வரலாறு கொண்ட இந்த இயக்கத்தில் இடையில் ஒரு சிறு பிரிவு ஏற்பட்டாலும் ஒரு தாயின் வயிற்றில் பிறந்த சகோதரர்களின் சண்டைக்கு பின் சமாதானமாக இந்த இணைப்பு நிகழ்ந்துள்ளது' என்று கூறினார்.
எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள இந்த இணைப்பு வலுவை சேர்க்கும் என்றும் இதுவரை நிகழ்ந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த இணைப்பு இருந்ததாகவும், இனி ஓபிஎஸ் அவர்கள் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என்றும் முதல்வர் ஈபிஎஸ் பேசினார். அதுமட்டுமின்றி கேபி முனுசாமி துணை ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.