close
Choose your channels

தினகரன் பணத்தில் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தாரா சுகேஷ் சந்திரா?

Tuesday, May 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிமுகவின் இரட்டை இலை சின்னதை குறுக்கு வழியில் பெற தேர்தல் கமிஷனுக்கு சுகேஷ் சந்திரா என்ற தரகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் டெல்லி போலீசார் மிக தீவிரமாக தொடர்ந்து விசாரணை செய்து கொண்டு வருகின்றனர்.

அதேபோல் தினகரனுக்கு முன்பே கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திராவிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விசாரணையில் கிடைத்த ஒரு திடுக்கிடும் தகவலாக 'தேர்தல் அதிகாரிகளுக்கு கொடுப்பதற்காக தினகரனிடம் பெற்ற பணத்தின் ஒரு பகுதியை சுகேஷ் சந்திரா, பாலிவுட் நடிகைகளிடம் உல்லாசமாக இருப்பதற்காக பயன்படுத்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது.

நட்சத்திர ஓட்டல்களில் சுகேஷ் சந்திராவுடன் தங்கிய பாலிவுட் நடிகைகளிடமும் தேவைப்பட்டால் விசாரணை செய்யவுள்ளதாகவும் டெல்லி போலிசார் திட்டமிட்டுள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட நடிகைகள் கிலியில் இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.