close
Choose your channels

திடீர் திருப்பம். ஓபிஎஸ்-இன் போர்ப் படையில் இணைந்த மதுசூதனன்.

Thursday, February 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அவர்கள் முதல்வர் ஓபிஎஸ் இல்லத்திற்கு வருகை தந்து தனது முழு ஆதரவை அளித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நத்தம் விஸ்வநாதன், பி.எச்.பாண்டியன், மைத்ரேயன் ஆகிய முக்கிய தலைவர்கள் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தற்போது அதிமுக அவைத்தலைவர் மதுசூதனின் ஆதரவால் ஓபிஎஸ் கை ஓங்கியுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தது குறித்து மதுசூதனன் கூறியபோது, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட அதிமுக
காப்பாற்றப்பட வேண்டும். சசிகலாவை அதிமுகவினர் நிராகரிக்க வேண்டும். ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவர் பன்னீர்செல்வம். எனவே அவருக்கு எனது முழு ஆதரவை வழங்குகிறேன்' என்று கூறியுள்ளார். தனக்கு ஆதரவு கொடுத்த மதுசூதனனுக்கு முதல்வர் ஓபிஎஸ் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
மேலும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனின் வருகை தங்கள் அணிக்கு வலிமையை கூட்டியுள்ளதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அவர்களும், ஓபிஎஸ் நடத்தி வரும் தர்ம யுத்தத்திற்கு மதுசூதனன் அவர்கள் ஆதரவு அளித்தது மகிழ்ச்சி அளிப்பதாக பி.ஹெச்.பாண்டியன் அவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.