close
Choose your channels

மீண்டும் இணைகிறார்களா மணிரத்னம்-ஐஸ்வர்யாராய்?

Thursday, May 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' படத்திற்கு பின்னர் அவர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ராம்சரண் தேஜா நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் வில்லனாக அரவிந்தசாமி நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு 'யோதா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகி ஐஸ்வர்யாராய் என்ற தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் 'இருவர்', 'குரு' மற்றும் 'ராவணன்' ஆகிய படங்களில் ஐஸ்வர்யாராய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யா நடிப்பது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டியுடன் இணைந்து 'தளபதி 2' படத்தை மணிரத்னம் இயக்க திட்டமிட்டுள்ளதாக ஒரு வதந்தி கோலிவுட்டில் பரவி வருகிறது. 'யோதா', 'தளபதி 2' இவற்றில் எந்த படத்திற்கு ஐஸ்வர்யாராய் பேசப்பட்டு வருகிறார் என்பதை அதிகாரபூர்வ அறிவிப்புக்கு பின்னரே தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.