ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அதிர்ச்சியை கொடுத்த புளுவேல் கேம்
Thursday, August 24, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களை அடிமைப்படுத்தி வைத்துள்ள புளூவேல் என்னும் ஆன்லைன் விளையாட்டால் இந்தியா உள்பட பலநாடுகளில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் தற்கொலை செய்துள்ளனர். சமீபத்தில் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இந்த நிலையில் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரின் நண்பர் ஒருவர் இந்த விளையாட்டு அடிமையாகி தற்கொலைக்கு முயன்றதாகவும், இதனால் அவர் அதிர்ச்சி அடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
சமூக வலைத்தளங்களும், ஸ்மார்ட் போன்களும் நம் வாழ்க்கையில் ஒரு சிறு பகுதிதான். நாம் அவற்றை கட்டுக்குள் வைத்து சரியான நோக்கத்திற்கு பயன்படுத்த வேண்டும். தேவையில்லாத நோக்கத்திற்காக பயன்படுத்தினால் தேவையில்லாத விபரீதங்களில் கொண்டுபோய் சேர்த்து விடும். அது முட்டாள் தனமானது. புளூவேல் விளையாட்டால் ஏற்படும் விபரீதங்கள் குறித்த விழிப்புணர்வை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்` எனத் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.