close
Choose your channels

அறுவை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆனார் அஜித்

Saturday, November 14, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜீத் சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முழங்கால் மற்றும் தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். சென்னை மற்றும் கோவையை சேர்ந்த டாக்டர்கள் குழு இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஒருநாள் மட்டும் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்த அஜீத், சற்று முன்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுதிரும்பியதாக தகவல் வெளிவந்துள்ளது.

டாக்டர்கள் அஜீத்தை மூன்று மாதங்கள் முழுஓய்வு எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதால் தன்னை யாரும் வீட்டிற்கு பார்க்க வரவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்வதாக அஜீத் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

பூரண ஓய்விற்கு பின்னர் அஜீத்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.