close
Choose your channels

பிரதமர் மோடியிடம் 'டாய்லெட்' குறித்து பேசிய '2.0' நடிகர்

Tuesday, May 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின் முக்கிய வில்லனாக நடித்து வருபவரும், சமீபத்தில் தேசிய விருது பெற்ற நடிகருமான அக்சயகுமார் இன்று பாரத பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்படுகிறது.
பிரதமருடனான சந்திப்பு குறித்து நடிகர் அக்சயகுமார் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'இந்த சந்திப்பின்போது பிரதமரிடம் என்னுடைய அடுத்தபடமான 'டாய்லெட்: ஏக் பிரேம் கதா' படம் குறித்து கூறியதாகவும், இந்த படத்தின் டைட்டிலை கேட்டுவிட்டு பிரதமர் புன்னகை செய்ததாகவும் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த சந்திப்பு தனக்கு மகிழ்ச்சி அளித்ததாக பிரதமர் மோடியும் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
அக்சயகுமார் நடித்து வரும் 'டாய்லெட்: ஏக் பிரேம் கதா' என்ற திரைப்படம் பிரதமர் மோடியின் கனவுத்திட்டங்களில் ஒன்றான 'தூய்மை இந்தியா' திட்டம் குறித்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.