close
Choose your channels

கேரள சூர்யா ரசிகர்களின் போலீஸ் புகார்

Sunday, February 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'சி 3' திரைப்படம் வரும் 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகவுள்ளது. முதல் இரண்டு பாகங்கள் நல்ல வெற்றியை பெற்றதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 'சி 3' படத்தை முதல்நாளே தமிழ் ராக்கர்ஸ் ஆன்லைனில் வெளியிடுவோம் என்று பகிரங்கமாக அறிவித்ததற்கு நேற்று இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆவேசமாக கண்டனம் தெரிவித்தார் என்பதை பார்த்தோம்.

தற்போது கேரளாவில் உள்ள சூர்யாவின் ரசிகர்கள் இதுகுறித்து ஹைடெக் செல் காவல்துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட ஒருசில இணையதளங்கள் 'சி 3' படத்தை இணையதளங்களில் வெளியிடுவதை தடுத்து நிறுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த புகாருக்கு காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் 'சி3' படம் இணையதளத்தில் ரிலீஸ் செய்வது, மற்றும் திருட்டு டிவிடி வெளியாவதில் இருந்து தப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.