close
Choose your channels

கமல் டைப்பில் நாட்டை விட்டு வெளியேற யோசிக்கும் பிரபல நடிகர்

Tuesday, November 24, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் 'விஸ்வரூபம்' படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டபோது உலக நாயகன் கமல்ஹாசன், 'நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக அறிவித்தார். பின்னர் விஸ்வரூபம் படத்தின் பிரச்சனை தீர்ந்தவுடன் தனது கருத்தை வாபஸ் பெற்றார். இந்நிலையில் பாலிவுட்டின் பிரபல நடிகரான அமீர்கான், தற்போது நாட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு இந்தியாவில் மத சகிப்புத்தன்மை அதிகரித்துள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்து கொண்ட நடிகர் அமீர்கான், 'கடந்த எட்டு மாதங்களாக நாட்டில் நிகழும் பல்வேறு சம்பவங்கள் இந்தியாவின் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால் நாட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு தனது மனைவி கிரன்ராவ், அச்சமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் திரையுலகினர் தாங்கள் பெற்ற விருதுகளை திருப்பி அளிப்பது, தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தும் வழிகளில் ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார். விருதுகளை திருப்பி கொடுப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கமல் கூறிய நிலையில் அவரது கருத்துக்கு மாறான ஒரு கருத்தை அமீர்கான் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.