close
Choose your channels

வெடி வெடிப்பதா? ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது. சாபம் விடும் சி.ஆர்.சரஸ்வதி

Wednesday, February 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுப்ரீம் கோர்ட் இன்று அளித்த சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா ,சசிகலா உள்பட 4 பேர்களுக்கும் தண்டனை வழங்கியுள்ளது. ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால் அவர் தண்டனை நீக்கப்படுவதாகவும், மற்ற மூவரும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தீர்ப்பை வரவேற்பை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதை சுட்டிக்காட்டிய சி.ஆர்.சரஸ்வதி, 'ஜெயலலிதாவும் குற்றவாளி என்று கூறிய தீர்ப்பை கொண்டாடி வரும் ஓபிஎஸ் ஆதரவாளர்களை அவரது ஆன்மா மன்னிக்காது என்று சாபம் விட்டுள்ளார்.

இதே தீர்ப்பை நீதிபதி குன்ஹா கடந்த 2014ஆம் ஆண்டு தெரிவித்தபோது அதிமுக தொண்டர்கள் கதிகலங்கி குன்ஹாவை கடுமையாக விமர்சித்தனர். ஆனால் தற்போது அதே குன்ஹாவை அதிமுக தொண்டர்கள் பாராட்டுகின்றனர் என்றால் சசிகலாவுக்கு கிடைத்த தண்டனை ஒன்றே காரணம் என்று அதிமுக தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.