close
Choose your channels

ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் தோனி மனைவிக்கு தொடர்பா?

Saturday, February 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு ஒன்றில் இன்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மனைவி இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அம்ரபளி ரியல் எஸ்டேட் என்ற நிறுவனத்தில் தோனியின் மனைவி சாக்ஷி பங்குதாரராக உள்ளார். அவரிடம் இந்நிறுவனத்தின் 25 சதவீத பங்குகள் உள்ளன. இந்நிலையில் இந்த நிறுவனம் சுமார் 4000 குடியிருப்புகளை கட்டி தருவதாக வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்றது. ஆனால் குறித்த காலத்தில் வீடுகளை ஒப்படைக்காமல் இன்னும் ஒரு வருடத்திற்கும் மேல் காத்திருக்குமாறு இந்நிறுவனம் கூறியுள்ளது.
ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத ஒரு வாடிக்கையாளர் இந்நிறுவனத்திற்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில் பங்குதாரர் என்ற முறையில் சாக்ஷியும் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.