close
Choose your channels

நான் ஆசிர்வதிக்கப்பட்டவள். எமிஜாக்சன் பூரிப்பு

Wednesday, April 13, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த 'தெறி' படத்தில் நடித்து முடித்துவிட்ட எமிஜாக்சன் நாளை இந்த படம் கொடுக்கப்போகும் ரிசல்ட்டை அறிய ஆவலுடன் உள்ளார். அதே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் '2.0' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.


இதுகுறித்து எமிஜாக்சன் சமீபத்தில் கூறியபோது, 'இந்தியாவுக்கு வந்தது முதல் ரஜினி மற்றும் விஜய் ஆகியோர்களுடன் நடிக்க வேண்டும் என்று மிகவும் ஆவலுடன் இருந்தேன். அந்த இரண்டு ஆசைகளும் தற்போது நிறைவேறிவிட்டது. எனவே இப்போது நான் ஆசிர்வதிக்கப்பட்டவள் போல் உணர்கிறேன்' என்று கூறினார்.

மேலும் '2.0' பட அனுபவம் குறித்து அவர் கூறியபோது, '2.0' படத்தில் நடிப்பது நல்ல அனுபவமாக இருந்தது. சென்ற வாரம் ரஜினி-அக்ஷயகுமாரின் ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட்டது. அடுத்த மாதம் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளேன். இந்த படத்தில் நான் ரோபோவாக நடிக்கவில்லை' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.