close
Choose your channels

ஜெயலலிதா மரணம் விசாரணை குறித்து ஆனந்த்ராஜ் பரபரப்பு பேட்டி

Monday, March 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டவுடன் அந்த கட்சியில் வெளியேறியவர் பிரபல நடிகர் ஆனந்த்ராஜ். சசிகலா மற்றும் அவரது கட்டுப்பாட்டில் அதிமுக சென்றுவிட்டதாகவும், முதல்வர் பதவியேற்க சசிகலா அவசரப்படுகிறார் என்றும் தைரியமாக ஊடகங்களில் பேட்டி கொடுத்தவர்

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆனந்த்ராஜ், ஜெயலலிதா மரணத்தில் ஆயிரம் சந்தேகம் மக்களிடம் இருப்பதாகவும், அந்த சந்தேகங்களை தெளிவுபடுத்த ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அதிமுக ஆட்சியில் குடும்ப தலையீடு இருக்காது என டிடிவி தினகரன் கூறுவதை ஏற்க முடியாது என்றும், அதிமுக உடைந்துவிடாமல் இருக்க உள்ளட்சித் தேர்தலுக்கு முன்பு உடனே உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் என்று நடிகர் ஆனந்த் ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.