close
Choose your channels

போலீஸூக்கு சென்ற 'புலி' படக்குழுவினர்

Saturday, July 11, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' படத்தின் டீஸரை படக்குழுவினர்களுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் தற்போது சிறையில் இருக்கும் நிலையில், அதே நாளில் புலி படத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படங்களை படக்குழுவினர் அனுமதியின்றி திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென புலி படத்தின் தயாரிப்பாளர்கள் காவல்துறையினர்களிடம் புகார் அளித்துள்ளனர்.

புலி படத்தின் தயாரிப்பாளர்களான சிபு தமீம்ஸ், பி.டி.செல்வகுமார் ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அவர்களிடம் அளித்துள்ள புகாரில், 'விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் உள்பட பலர் நடிப்பில் பல கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள புலி படத்தின் புகைப்படங்களை திருடி இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளனர்.

இந்த புகாரை பெற்றுக்கொண்ட கமிஷனர் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சைபர் க்ரைம் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே இதுகுறித்து தனிப்படை ஒன்று விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றும் போலீஸ் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.